வவுனியா ஓர்கன் புதுவாழ்வு பூங்கா மாணவர்களுக்கு விசேட உணவு வழங்கல்!!

1176

 
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு நேற்று (04.03.2016) கூமாங்குளத்தில் அமைந்துள்ள ஓர்கன் புதுவாழ்வு பூங்காவில் நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்திய கிழக்கு நாடுகளின் இணைப்பாளர்களில் ஒருவரான தோழர் குணா அவர்களின் ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் முத்தையா கண்ணதாசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளர் சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பின்லாந்து இணைப்பாளர் சந்துரு மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், அமைப்பாளர் வ.பிரதீபன் மற்றும் ஓர்கன் புதுவாழ்வு பூங்காவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 IMG_2780 IMG_2781 IMG_2788 IMG_2795 IMG_2804 IMG_2820 IMG_2821 IMG_2825 IMG_2832 IMG_2860 IMG_2867 IMG_2877 IMG_2886 IMG_2914