வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை! ஏறாவூரில் சம்பவம்!!

1174

625.0.560.320.160.600.053.800.668.160.90

வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது சுமார் 2 இலட்ச ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாரும், மட்டக்களப்பு குற்ற தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.