
கொழும்பின் பிரபல கல்லூரி ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பாடசாலை இன்று காலைமாணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதாவது குறித்த பாடசாலையின் ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வின் போது பாரியநிதி அதிபரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு நேற்றைய தினம் குறித்த ஆசிரியர் இலஞ்ச ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதுள்ளார்.
இதனடிப்பாபடையில் பாடசாலை அதிபருக்கு எதிராகவும் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முறைபாடு செய்துள்ளமையே இந்தத் தாக்கதல் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆசிரியர் இன்று காலை பாடசாலைக்கு சமூகமளித்த நிலையிலேயே மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




