கனடா நாட்டில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டில் இருந்த இருவரை 12 வயது சிறுமி ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அன்னாக்கா பவுச்சர் என்ற 12 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அன்னாக்காவிற்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் அலுவலக வேலையாக பெற்றோர் வெளியே சென்றுள்ளனர்.
அப்போது, ரொட்டி துண்டுகளை சமைப்பதற்காக அன்னாக்கா சமையல் அறையில் வேலை செய்து வந்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு, புகை நாற்றம் வெளியேறியுள்ளது.
ஆனால், எங்கு தீப்பற்றி உள்ளது என்பதை சிறுமியால் கவனிக்க முடியவில்லை. ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த சிறுமி உடனடியாக தம்பியையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு வெளியே விரைந்துள்ளார்.
சலையல் அறையில் தீப்பற்றிக்கொண்டதால், ஜுவாலைகள் வேகமாக பரவியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிறுமி தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருப்பதை தடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமி பேசியபோது, ‘வீட்டில் தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை எனது பெற்றோர் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளனர்.
இது எனக்கு மிகவும் உதவியாக இருந்ததால், இருவரையும் காப்பாற்றி பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தீவிபத்து ஏற்பட்டபோது புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிறுமிக்கு பொலிசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.






