1700 பேருக்கு இன்று இரட்டைக் குடியுரிமை!!

903

Dual_Citizenship Srilanka

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 1000 பேருக்கு அதிகமானவர்களுக்கு இதுவரை இரட்டை குடியுரிமை வழங்கியுள்ளதாக கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்றும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாதத்திற்கு 1500 நபர்களுக்கு குறித்த குடியுரிமை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் நாவின்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து சென்று வெளிநாடுகளில் வசிப்பவர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளவர்களுக்கே குறித்த இரட்டை குடியுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.