வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பலதுறைசார்ந்த பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரி திரு.சுவாணி தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, தர்மபால செனவிரத்தின மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் போதனாசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.































