அவதானம் : இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

556

Dengu

வருடத்தின் இதுவரையான காலத்தில் 22,799 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் 7369 டெங்கு நோயாளரகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ,நீர்கொழும்பு வைத்தியசாலை, தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை 200 நோயளர்களுக்கு காய்ச்சல் நிலைமை காணப்படுவதுடன் அதில் 25 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அடையாளங்கள் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகபடியாக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல்,கண்டி, மாத்தளை, காலி, மாற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது.