இரத்தினபுரி, வேவல்வத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருபெவில பிரதேசத்திலகம வீடொன்றில் 37 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லெஷ்ஷமன் சசிகலா என்ற பெண்ணும் சுவேந்திரன் சஞ்சீவனி என்ற மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலங்கள், அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று (13) நடைபெறவுள்ளன.
கொலை செய்யப்பட்ட குறித்த பெண் தகாத உறவை பேணிவந்த காதலனால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சந்தேகிப்பதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்காக வேவல்வத்த பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






