விரைவில் சுவாதியின் பெயரில் மொபைல் மென்பொருள்!!

658

Swathi

பொறியியலாளர் சுவாதியின் பாடுகொலை பலருக்கு பாடம் கற்றுத்தந்துள்ள நிலையில், குறித்த கொலை வழக்கில் நாளுக்கு நாள் புதிய செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

கடந்த மாதம் 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவரின் படுகொலை பெண்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே பாதுகாப்பு படை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக சுவாதி மொபைல் அப்ளிகேஷன் என்ற அப்ஸை விரைவில் அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்ஸில் பெண் பயணிகளை பாதுகாக்கும் வகையிலான பல புதிய வசதிகள் வடிவமைக்கப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.