வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு கல்லூரியின் அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் வழிகாட்டலில், செல்வன் டிலக்ஸன் தலைமையில் நேற்று (13.07.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஓமந்தை வைத்திய அதிகாரி செ.மதுரகன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இன் நிகழ்வில் ‘வெண்கோடு’ சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. செல்வன் ந.சதுர்ஸன், செல்வி தே.டிலானி ஆகியோர் இந்நூலின் இதழாசிரியர்களாவர்.
இங்கு கலந்துகொண்டு உரையாற்றியவர்கள் 2016 க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களை வாழ்த்தி கௌரவித்து நம்பிக்கை ஊட்டினர்.
























