வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை : 2000ற்கும் அதிகமானோர் பங்கேற்பு!!

525

 
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (14.07.2016)இடம்பெற்ற தொழில் சந்தையில் 2000ற்கு அதிகமான இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.

இன்று காலை 8.30 மணிக்கு தொழிற்சந்தையினை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனில் அபேவர்த்தன, வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், ம.தியாகராசா, பணிப்பாளர் நாயகம் மனிதவலு மற்றும் வேலைவாயப்புத் திணைக்களம், சர்வதேச தொழில் ஸ்தாபன நிறுவனப் பிரதிநிதி திருமதி.அயோம டி சில்வா,

மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஜரோப்பிய ஒள்றிய தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.சிவப்பிரகாசம், வவுனியா மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலைய திணைக்கள உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இன்று காலை 8.30 மணிமுதல் மலை 4 மணிவரை இடம்பெற்ற தொழிற்சந்தையில் 2000ற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு தொழில்வாய்ப்பினைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தனியார்துறையில் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பினைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டியதாகவும் பட்டதாரிகள் அரச தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்து வந்ததாகவும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

1 IMG_2082 IMG_2086 IMG_2092 IMG_2093 IMG_2108 IMG_2126 IMG_2128 IMG_2132 IMG_2133 IMG_2139 IMG_2146 IMG_2147 IMG_2158 IMG_2160 IMG_2161 IMG_2165 IMG_2168 IMG_2171 IMG_2173 IMG_2178 IMG_2179