எலிகளை கொன்றால் ஆயிரக்கணக்கில் சம்பளம் : மும்பையில் வினோதம்!!

759

Rat catching in mumbai

மும்பையில் எலிகளை கொல்ல 29 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று கொண்ட எலிகள் தண்ணீர் குழாய்கள்களில் சுற்றித் திரிவதால் அவற்றின் சிறுநீர் மூலம் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நகராட்சி எலிகளை கொல்ல தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக எலிகளை கொல்ல 29 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இவர்களின் வேலை இரவில் கம்பால் 100ல் இருந்து 150 எலிகளை அடித்து கொல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு எலிக்கு ரூ.10 முதல் ரூ.18 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்கள் ஒருநாள் இரவில் ரூ.1800 முதல் ரூ.2700 வரை சம்பாதிக்கின்றனர்.

மேலும் அதிக ஆட்களை வேலைக்கு எடுத்து, பல நகரங்களில் எலிகளை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.