வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் வாணி அருணோதயா முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி இன்று(16.07.2016) 1.30 மணியளவில் வேப்பங்குளத்திலுள்ள பாடசாலை விளையாட்டு அரங்கத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.சிவசக்தி ஆனந்தன் அவர்களும் பிரதம விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மற்றும் கெளரவ விருந்தினராக முஸ்லிம் தேசிய பாடசாலை அதிபர் M.S.ரம்ஸீன்,
விசேட விருந்தினர்களாக இ.நித்தியானந்தன்(மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்), திரு.கந்தவேள் (அதிபர்- பாவற்குளம் கலைமகள் வித்தியாலயம்), திரு.செல்வகுமார் (மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்), திரு.க.சந்திரகுலசிங்கம் (முன்னை நாள் உப நகரபிதா), M.அமிர்தலிங்கம்(மத்தியஸ்தர் சபை உறுப்பினர், சமாதான நீதவான்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு போட்டிகள்,உடற் பயிற்சி கண்காட்சிகள் மற்றும் பரிசளிப்பு வைபவங்கள் இடம்பெற்றன.
-சுகுமார்-

























