வவுனியா நெளுக்குளம் கூமாங்குள வீதியில் இன்று (18.07.2016) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கூமாங்குளம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் கிரிஷாந்தன் (22) விதுஷன்(21) ஆகிய இருவருமே காயமடைந்த நபர்களாகும். மேலதிக விசாரணைகளை நெளுக்குள பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

















