விமானநிலையத்தில் 16 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணங்களுடன் மூவர் கைது!!

566

Foreign Money

கட்டுநாயக்க விமானநிலையத்தில் 16கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன்மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதில் இரண்டு பெண்களும் அடங்குவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சுங்க அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

இந்த மூவரும் 16 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை கட்டார் ஊடாகதுபாய்க்கு கொண்டு செல்ல முயற்சித்தாகவும் சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறான பெருந்தொகை பணம் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படவிருந்தநிலையில் கைப்பற்றப்பட்டுள்ளமையானது இதுவே முதற்தடவை என்றும் சுங்க அதிகாரிகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.