வவுனியா குளக்கரையில் பூந்தோட்டம் ஸ்ரீநகரை அண்டிய பகுதியிலிருந்து இன்று (20.07.2016) காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
வவுனியா ஸ்ரீநகரைச் சேர்ந்த மயில்வாகனம் என்ற 66 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களாக இவரைக் காணவில்லை என்று போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








