போதை மற்றும் மது பாவனையில் முன்னிலை வகிக்கும் இலங்கை!!

888

FOUR HANDS MALE AND FEMALE TOAST WITH MUGS OF BEER

போதை மற்றும் மதுபாவனை இலங்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மது கொள்வனவுக்காக வருடமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படுவதாக இலங்கை மது ஒழிப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய பயன்படும் நிதியின் பெருந்தொகை அழிவடைவதாகவும், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சபையின் செயலாளர் சக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

18 தொடக்கம் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விநியோகிப்பது சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்தல் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மதுபாவனையில் இலங்கை முன்னிலையில் இருப்பதாகவும், இதனால் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு உரையாற்றிய விசேட வைத்தியர் அநுலா விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதனை தடுப்பதற்கான அல்லது இந்த நிலையினை மாற்றுவதற்கான சட்டங்களை உருவாக்குவதோடு, நாட்டில் அதிகரித்துள்ள தற்கொலைக்கும் இந்த மதுபாவனையே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.