வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக இன்று (21.07.2016) வியாழக்கிழமை காலை தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் தனது கடமையை பொறுப்பெற்றுகொண்டார்.
மிக நீண்டகாலமாக இருந்து வந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்க்கான அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அறியமுடிகிறது.
வவுனியாவில் புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி ஒய்வு பெற்று பின்னர் வவுனியா வடக்கு வலயத்தின் ஓமந்தைகோட்ட கல்வியதிகாரியாக பணியாற்றிஇருந்தார் .
தற்போது அதிபர் சேவை தரம் ஒன்றில் உள்ள (SLPS-I) தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் வவுனியா நகர கோட்டகல்வி அதிகாரி எம்.பி.நடராஜ் முன்னிலையில் பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள் அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் மற்றும் வவுனியா வடக்கு மற்றும் தெற்கு வலய பணிமனைகளின் உதவிகல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை சமூகத்தினர் புடைசூழ தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இனி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி மற்றும் இணைபாட விதான செயல்பாடுகளில் பெருமளவிலான மாற்றங்களை எதிர்பார்க்கமுடியும் என கடமையேற்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.






