மலேரியாவை தடுக்க புதிய வழி கூறும் விஞ்ஞானிகள்!!

720

Malaria

மலேரியாவை சுமந்துவரும் கொசுக்கள் சில விலங்குகளின் வாசனையால் அதிலும் குறிப்பாக கோழிகளின் வாசனையால் தடுக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அனோபிலிஸ் அராபியென்சிஸ் கொசு, விலங்குகளின் இரத்தத்தை காட்டிலும், மனித இரத்தத்தையே பெரிதும் விரும்பவதாக எத்தியோப்பியாவில் பணி செய்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் இது கால்நடைகளான ஆடு மற்றும் வெள்ளாடுகளிலிருந்து இரத்தத்தை அவ்வப்போது உறிஞ்சுகிறது. ஆனால், கோழிகளை மட்டும் தவிர்த்துவிடுகிறது.

இந்த கண்டுபிடிப்பானது மலேரியா நோய் மிக அதிகமாக தொற்றிப் பரவியுள்ள பகுதிகளிலும், பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராக கொசுக்களின் எதிர்ப்பு திறன் வளர்ந்து வரும் பகுதிகளிலும், பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த ஸ்வீடிஷ் – எத்தியோப்பிய குழு தெரிவித்துள்ளது.