வவுனியா சேமமடுப் பகுதியில் வைத்து ஒருதொகை முதிரைக் குற்றிகள் ஓமந்தைப் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவகையில்,
நெடுங்கேணியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவிருந்த 11 முதிரைக்குற்றிகள், 30 வருடம் பழமைவாய்ந்த மரக்குற்றிகளை எடுத்துச் செல்லப்படவிருந்தபோதே ஓமந்தைப் பொலிஸ் நிலைய டி.ஜ.ஜி தேசபந்த தென்னக்கோண், எஸ்.எஸ்.பி. சிறிதகுமார, ஏ.ஸ்.பி. டபில்யூ. டி. என். புp. வெல்கம அவர்களின் அறிவுறுத்தலுக்க அமைய பொறுப்பதிகாரி சமன் குமார மற்றும் ஓமந்தை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குறித்த மரக்குற்றிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
முதிரைக் குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனத்துடன் சென்ற இரு சந்தேக நபர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எற்கனவே மரக்கடத்தல் தொடர்பான முறைப்பாடு புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் எதிர்வரும் 29.07.2016 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.









