வவுனியா சிறையில் பலியான நிமலரூபனின் தந்தை காலமானார்!!

548

Nimal

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனின் தந்தை கணேசன் (வயது 73) நேற்று காலமானார்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறைக்காவலர்களை பணயமாக வைத்து போராட்டம் நடத்தியதாக விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகி அனுராதபுரம் சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 ஆம் திகதி மரணமாகிய க.நிமலரூபனின் தந்தையான கணேசனே காலமாகியுள்ளார்.

புற்றுநோயால் சில காலமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் யாழ் போதனா வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.

இவரது சடலம் தற்போது வவுனியா, நெளுக்குளம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நிமலரூபனின் தயார் தெரிவித்தார்.