ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணெய் இறக்குமதி!!

379

920x1240

ஈரானிடம் இருந்து மீண்டும் மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதோடு, எண்ணெய் இறக்குமதி நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஈரான் அமைச்சருடன் இலங்கை இலங்கையின் பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி நேற்று விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். 2012ம் ஆண்டு முதல் ஈரானுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமையால் இலங்கை அரசாங்கம் அந்த நாட்டிடம் இருந்து மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.