ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் தங்கியுள்ளனர்!!

635

Srilankan

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அகதிகள் தமிழ் நாட்டில் முகாம்களில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதி தெரிவித்தார்.

அங்குள்ள 5,000 அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள அகதிகளுக்கு சுய தொழிலுக்கான நிதி உதவியையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதி தெரிவித்தார்.

இவர்கள் நாட்டில் நிலவிய அசாதாரன சூழ்நிலையின் போது இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.