வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் என்பன வற்றிற்கு 2016ம் வருடாந்த அபிவிருத்தித்திட்டத்தின்; அடிப்படையின் கீழ் இவ் உதவித்திட்டங்கள் நேற்று 25.07.2016 பிற்பகல் 3 மணியளவில் வவுனியா சுற்றுவட்ட வீதியிலுள்ள கிராம அபிவிருத்தித்திணைக்களத்தில் வடமாகாண கடற்தொழில், மீன்பிடி, கிராம அபிவிருத்தி, வீதி, போக்குவரத்து துறை அமைச்சர் ப.டெனீஸ்வரனினால் 22 கிராம அபிவிருத்திச்சங்களுக்கு சமையலறை பாத்திர உபகரணங்கள், தளபாட உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன் தையல் பயிற்சி பெற்றுவந்த 17மாணவர்களுக்கு பயிற்சி நெறியின் இறுதியில் தையல் இயந்திரமும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜெயதிலக, அமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன், சமயத்தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.















