கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.பரந்தனை சேர்ந்த 64 வயதான சண்முகன் என்ற முதியவரே விபத்தில் பலியாகி உள்ளார்
புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்றுடன் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முதியவர் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான முதியவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
காரை செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் சாரதியை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






