13 வயதுச் சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களுக்கு பொலிஸ் வலைவீச்சு!!

967

Abuse

தெனியாய – பிட்டபெத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலுக்கமைய பஸ் நடத்துநர்கள், சாரதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பல முக்கயஸ்தர்கள் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர் இது தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.