ஆபாச இணையத்தளத்தின் மூலம் பணம் சம்பாதித்த ஜோடி வசமாக சிக்கினர்!!

1495

Web site

சென்னையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தை ஆபாச வலைத்தளம் இயக்கி வந்த ஜோடியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கேவலமான செயலின் மூலம் குறித்த ஜோடி சுமார் 2.4 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த சித்தத்த வேலு, பிரிசில்லா மார்கரெட் தனராஜ் ஜோடியே குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், குறித்த வலைத்தளத்தில் குறிப்பிடபட்டிருந்த மின்னஞ்சல் மூலம், சைபர் கிரைம் செல் பிரிவினர் உதவியுடன் அவர்களை கண்டுபிடித்து கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வங்கி பண பறிமாற்றத்தை குறித்து நடத்திய விசாரணையில், கிட்டதட்ட சுமார் 2.4 கோடி ரூபாய் வரை அவர்கள் பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருச்சியை சேர்ந்த சித்தத்த வேலுவிற்கும், வேலூரை சேர்ந்த பிரிசில்லா மார்கரெட் தனராஜ்க்கும் திருமணம் நடந்துள்ளது, திருமணத்திற்கு பின்னர் இருவரும் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய வேலு நெட்வொர்க்கிங் மற்றும் இணைய ஹோஸ்டிங்கை கற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர், மனைவியின் உதவியுடன் வீட்டிலேயே குழந்தை ஆபாச வலைத்தளத்தை இயக்கி வந்துள்ளார். வலைத்தளத்தில் தொடர்புக்கு அவர்களின் மின்னஞ்சல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த வலைத்தளத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளிலிருந்து உறுப்பினர்களை சேர்த்ததின் மூலம் இவர்கள் பணம் சம்பாதித்து வந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஜோடியை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.