
வெல்லவாய பகுதியில் யானை தாக்கி பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சிறுமி தன் தாத்தாவுடன் பாடசாலைக்குச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




