வவுனியாவில் நேற்று இரவு பண்டாரிக்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் உடைத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா பண்டாரிகுளம் விசாகர் வீதியிலுள்ள வர்த்தக நிலையம் நேற்று(27.07.2016) இரவு திருடர்களினால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது
வர்த்தக நிலையத்திலிருந்த சிகரட் உட்பட மூன்று லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக வசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










