தன்னை விடவும் முன்னாள் அதிபர் கிளின்டனை விடவும் அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ஹிலரி கிளின்டன் தான் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிலடெல்பியாவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய கூட்டத்தில் உரையாற்றிய போது அதிபர் ஒபாமா, ஹிலரி கிளின்டனை ஆதரித்தும் பாராட்டியும் பேசியுள்ளார்.
அமெரிக்க ஆட்சியைத் தகுதிவாய்ந்த ஹிலரியிடம் ஒப்படைக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அதிபராகப் பதவி வகிப்பதற்கு ஹிலரி மிகவும் தகுதி வாய்ந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், நம்பிக்கை இல்லாதவர் எனவும் அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ஒபாமா வலியுறுத்திக் கூறியுள்ளார்.






