வவுனியா வீரபுரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் திறந்து வைப்பு!!

377

138

வவுனியா வீரபுரம் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளைக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

செட்டிகுளம்- நெளுக்குளம் பிரதான வீதியில் உள்ள வீரபுரம் கிராமத்திலேயே இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ் அலுவலகத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்து வைத்தார்.

இதேவேளை, அலுவலக திறப்பு விழாவைத் தொடர்ந்து வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேசசபைச் சேர்ந்த கதிர்காமு பரமேஸ்வரன், செட்டிகுள பிரதேசசபைத்தலைவர், நெடுங்கேணி பிரதேசசபைத் தலைவர், செட்டிகுள பிரதேசசபையைச் சேர்ந்த சந்திரன், சிவம் ஆகியோரும் வேட்பாளர்களான தியாகராஜா, இந்திரராஜா, நடராஜா, சத்தியலிங்கம், மயூரன், ரவி, ரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.