வவுனியா ஓமந்தையில் உயிர் பிரியும்வரை தனிநபர் உண்ணாவிரதம்!!

710

Omanthai

பொருளாதார மத்திய நிலையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

வடமாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே! மாகாண சபை உறுப்பினர்களே! குடுமிச் சண்டை வேண்டாம், ஒமந்தை சரியான தேர்வு, இது நிறைவேற வேண்டுமேன தெரிவித்து தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் 10.08.2016 அன்று காலை7 மணிக்கு ஒமந்தை வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உயிர் பிரியும வரை உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.