வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் (05.08.2016) அதிகாலைமுதல்சிவஸ்ரீ.சதா.சங்கரதாஸ்சிவாச்சாரியார் தலைமையில் அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை,கொடிதம்ப பூசையை சுண்ணம் இடித்தல் சடங்கினை தொடர்ந்து காலை எட்டுமணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
தொடர்ந்து ஒன்பது மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் அமிர்தவர்சினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
தொடர்ந்து தீர்த்த உற்சவம் நிறைவடைந்த பின்னர் மதியம் ஒருமணியளவில் ஆடிபூர உற்சவமும் ருதுசாந்தி பெருவிழாவும் வெகு சிறப்பாக இடம்பெற்றன .
















