வவுனியாவில் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு!!

805

 
டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரையிலான விடயங்களை உள்ளடக்கிய இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
வவுனியா தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு வவுனியா, சிந்தாமணி ஆலய மண்டபத்தில் நேற்று (06.08.2016) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தமிழ் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் மு.திருநாவற்கரசினால் எழுதப்பட்ட இந்த நூலை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் வெளியிட்டு வைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமானமான சுரேஸ் பிரேமச்சந்திரன்,

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சி.ஆ.யோதிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், மன்னார் பொது அமைப்புக்களிள் ஒன்றியத்தலைவர் சிவகரன் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

book1 book2 book3 books books1 IMG_6332 IMG_6343 IMG_6344 IMG_6354 IMG_6376