உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களையுமே நாம் வியப்போடுதான் தற்போது பார்க்கின்றோம். ஏனெனில் இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியத்துடனே ஒவ்வொரு சம்பவங்களும் நடக்கின்றன.
மகளின் கணவருடன் தாய் தொடர்பு, தந்தையுடன் மருமகள் கள்ளக்காதல், சகோதரியுடம் சகோதரன் கள்ளக்காதல் போன்ற கொடூரமான சம்பவங்கள் இன்று அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது மனைவியின் தாயோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவமே அது.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் சூராஜ் ( 22) . இவர் 42 வயதான தனது மாமியார் ஆஷா தேவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சூரஜ் என்பவருக்கும் லலிதாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்த சில தினங்களுக்கு பின்பு சூராஜிற்கு உடல் நிலை சரியில்லை என்று அவரை பார்த்துக்கொள்ள லலிதாவின் தாய் ஆஷா தேவி அவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
ஆஷாவின் கணவர் டில்லியில் பணிபுரிவதால், மருமகன் சூராஜ் மற்றும் மாமியார் ஆஷாவிற்கு இடையே கள்ளக் காதல் ஏற்பட்டு இருவரும் வெளியேயும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர்.
அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டதாகவும், பின்னர் தங்களின் கிராமத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆஷாவும் சூராஜூம் மீண்டும் அவர்கள் கிராமத்துக்குச் சென்று, ஊர் பஞ்சாயத்திடம் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிப்பதாகவும் சேர்த்து வைக்குமாறும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பஞ்சாயத்தும் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு முந்தைய திருமணத்தில் இருந்து சட்டரீதியாக விவாகரத்து வாங்கி இருவரும் பிரிந்து வந்தனரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
மேலும் தனது மகளுடன் சேர்ந்து சூராஜுடன் வாழ ஆஷா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களின் இந்த செயலால் அவர்களது குடும்பத்தினர் கடும் கோபமடைந்துள்ளனர்.






