வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது!!

1043

K1

வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று (11.08.2016) அதிகாலை 12.30 மணியளவில் வீடு மற்றும் கடைகள் உடைத்து இரண்டு இலட்சம் ரூபாய் பெருமதியான பொருட்களையும் 50000 ரூபா பணத்தினையும் கொள்ளையிட்ட முன்னால் இராணுவ வீரனான “கலாபிட்டியகே சுரங்க புஷ்பகுமார”(29) எனும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கிரிந்திவெல பகுதியிலிருந்து வவுனியா போகஸ்வெவ பகுதிக்கு சென்று மேற்படி கொள்ளையில் ஈடுபட்டு கொள்ளையிட்ட பொருட்களுடன் தப்பித்து செல்லும் நோக்கில் பேருந்தொன்றில் பயணித்த வேளையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் (IP) செனரத் மற்றும் பொலிஸ் சாரஜன்ட் திரு.யேசுதாசன் (42521) தலைமையிலான குழுவினர் துரித மற்றும் அதிரடி நடவடிக்கையின் மூலம் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்களை இன்று காலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் தமது கிராமங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் புதிதாக காணப்பட்டால் பொலிஸாருக்கு அறியப்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுகொண்டனர்.

news (2) news (3)