இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள நவ்ருவில் பாலியல் துன்புறுத்தல்கள்!!

595

nawru

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்படும் நவுரு தீவு முகாம்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சுமார் 2000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அங்கு இடம்பெற்றுள்ளதாக அல் ஜெசீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது

இதேவேளை சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பும், மனித உரிமைகள் அமைப்புக்களும் குற்றம் சுமத்தியுள்ளன.

இதேவேளை, சித்திரவதைகள் காரணமாக சில புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள உந்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.