பிணை கிடைத்தது : மகிழ்ச்சியில் ஆடி கார் ஐஸ்வர்யா!!

1667

Odi car Iswarya

சென்னையில் மது போதையில் காரை ஓட்டி தொழிலாளர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த மாதம் தனது நண்பர்களுடன் இரவு திரைப்படம் பார்த்து விட்டு, தனது ஆடி காரில் நண்பரை அழைப்பதற்காக மாமல்லபுரம் அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது கார் ஓட்டிவந்த ஐஸ்வர்யா மோதினார்.

இதில் அந்த தொழிலாளி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை வழங்கக் கோரி ஐஸ்வர்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் பிணை வழங்க மறுத்துவிட்டனர். தற்போது மீண்டும் பிணை வழங்ககோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, விசாரணையின் போது ஐஸ்வர்யா தரப்பு வழக்கறிஞர் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக தான் மது அருந்தியுள்ளார். விபத்து நடந்தும் அம்புலன்ஸ்சிற்கு போன் செய்துள்ளார் என வாதத்தை முன் வைத்தார்.

இதை கேட்ட நீதிபதி சொக்கலிங்கம் ஐஸ்வர்யாவுக்கு பிணை வழங்க உத்திரவிட்டார். மேலும் 2 வாரங்கள் கிண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.