லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் நேற்று இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.
ரதோற்சவ நிகழ்வை வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று நீண்டநேரமாக ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில் பிரித்தானியாவில் அதிகம் விற்பகையாகும் நாளிதழான சண் மற்றும் டெயிலி மெயில் ஊடகங்களும் இந்தநிகழ்வுக்கு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளன.