வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் 10ஆவது நாளான நேற்று மாலை 5 மணியளவில் மஞ்சத் திருவிழா என்றழைக்கப்படும் மஞ்சம் மாலை நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதேவேளை, இன்று இடம்பெற்ற மஞ்சத் திருவிழாவில் ஏராளமான அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.