இரண்டு வாரங்களுக்குள் இராணுவ முகாம் நீக்கப்படும்!!

999

Sambanthan

கிளிநொச்சி, பரவிபாஞ்சான் இராணுவ முகாமை இரண்டு வாரங்களுக்குள் நீக்கி மக்களின் இடங்களை விடுவித்து கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கூறியுள்ளார்.

எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இதுகுறித்து பேச இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இராணும் முகாம் அமைக்கப்பட்டுள்ள தமது இடங்களை விடுவிக்க கோரி அந்த முகாமிற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்களை சந்தித்த போதே ஆர். சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் இந்த வாக்குறுதியை அடுத்து 05 நாட்களாக இடம்பெற்று வந்த எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.