பேயை கண்ட பராட்டா சூரி : வீடியோ எடுத்து பேஸ்புக்கில் தரவேற்றம்!!( காணொளி)

783

Soori

தென்னிந்திய தமிழ் திரைப்படநடிகர் பராட்டா சூரி தனது காரில் வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது நிஜமான அமானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்ததாக தெரிவித்து அதனை வீடியோ எடுத்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றியுள்ளார்.

குறித்த காணொளியானது சமூகவலைத்தளங்களில் தீயாகப் பரவிவருகின்றது.

கோயம்புத்தூரில் இருந்து பழனி நோக்கி தனது வாகனத்தில் அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருக்கையிலேயே குறித்த அமானுஷ்யத்தை நேரில் கண்டதாக சூரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அது உண்மையில் பேய் எனவும் நம்ப முடியாத உண்மையெனவும் தெரிவித்துள்ளார்.

காணொளியைப் பார்க்க