அடுத்­த­மாத வாட­கையை செலுத்த வழி­தெ­ரி­யாமல் தடு­மா­றினேன் : நடிகை இஷா குப்­தா!!

558

esha gupta

திரைப்­ப­டங்­களில் நடிக்க வந்த புதிதில் அடுத்த மாத வீட்டு வாட­கையை எப்­படி செலுத்­து­வது எனத் தெரி­யாத அள­வுக்கு பொரு­ளா­தார நெருக்­க­டி­களை தான் எதிர்­கொண்­ட தாக பொலிவூட் நடிகை ஈஷா குப்தா கூறி­யுள்ளார்.

ஈஷா குப்தா டில்­லியைச் சேர்ந்­தவர். 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்­தியா அழ­கு­ரா­ணி­யாகத் தெரிவானார். 2012 ஆம் ஆண்டு ஜெனட் 2 எனும் திரைப்­ப­டத்தின் மூலம் பொலிவூட் நடி­கை­யாக அறி­முக­மானார்.

திரை­ப்ப­டங்­களில் நடிப்­ப­தற்­காக மும்­பைக்கு சென்ற புதிதில் பெரும் சிர­மங்­களை எதிர்கொண்டதாக அவர் தெரி­வித்­துள்ளார். “அப்­போது, அடுத்த மாத வாட­கையை எப்­படி செலுத்தப் போகிறேன் எனத் தெரி­யாமல் இ­ருந்­தது. உங்கள் திரைப்­ப­டங்கள் தோல்­வி­ய­டைந்தால் யாரும் உங்­களைத் தேட மாட்­டார்கள்.

உங்­க­ளுக்கு இரண்­டா­வது வாய்ப்­பொன்று கிடைக்­காது. எனக்கு கோட்­பாதர் எவரும் இல்லை. எனது ஒரே பாதர் (தந்தை) சினிமா தொழிற்­று­றையை சாரா­தவர்” என ஈஷா குப்தா கூறி­யுள்ளார்.

அத்­துடன், எனக்கு பின்­பு­ல­மாக எவரும் இல்­லா­ததால் நான் மிகக் கடு­மை­யாக பாடு­பட்டு பணியாற்றினேன். அதுவும் ஒரு நல்ல விட­யம் தான். ஏனெனில், நான் இந்த நிலைக்கு உயர்ந்தமைக்கு எவ­ரையும் கார­ண­மாகக் கூறத் தேவை­யில்லை.

இதை சிலர் தவ­றாகக் கரு­தலாம். ஆனால், இது உண்மை. என்னை நடி­கை­யாக்­கி­ய­மைக்கு யாரையும் கார­ணமாகக் கூற முடி­யாது” எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றெ­னினும், ஜெனட் 2 படத்தின் மூலம் தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திய தயா­ரிப்­பாளர் முகேஷ் பட் உட்­பட பல­ருக்கு நன்றி கூற தான் கட­மைப்­பட்­டுள்­ள­தா­கவும் ஈஷா குப்தா கூறி­யுள்ளார்.

30 வய­தான ஈஷா குப்தா அண்­மையில் வெளி­யான ரஷ்டம் திரைப்­படத்தில் அக் ஷய் குமார், இலியானா ஆகி­யோ­ருடன் நடித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.