வவுனியா குடியிருப்பில் நகரசபைக்கு சொந்தமாக கட்டிடத்தொகுதியில் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இராணுவ முகாம் இன்று மாலை 3 மணிக்கு உத்தியோகபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதுடன் செய்தி சேகரிக்க அனுமதி மறுத்திருந்தனர்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசாவுடன் தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரிய போதும் பிரதேச செயலாளரூடாகவும் ஊடகவியலாளருக்கு அனுமதி இல்லை என்ற பதிலே அனுப்பப்பட்டது.
குடியிருப்பு இராணுவ முகாமானது யுத்த காலங்களில் சோதனைச் சாவடியாக செயற்பட்டதுடன் இராணுவ முகாமைச்சூழ கோவில்கள், பாடசாலை, குடியிருப்பு, சிறுவர் பூங்கா மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை போன்றன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












