பிரான்ஸிலுள்ள நகரமொன்றின் கடற்கரைகளில், தலைமுதல் கால்வரை உடலை மறைக்கும் வகையிலான புர்கினி எனும் நீச்சலுடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் அதி உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
பிரான்ஸின் தென் பிராந்திய நகரான விலேநியுவ் -லோபெட் கடற்கரைகளில் புர்கினி அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பான வழக்கு அந்நாட்டின் அதி உயர் நீதிமன்றமான அரசுப் பேரவையில் நடைபெற்றது.
இவ்வழக்கில், விலேநியுவ் -லோபெட் கடற்கரைகளில் புர்கினி அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இடைநிறுத்தி அந்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த இடைநிறுத்த உத்தரவானது, பிரான்ஸின் ஏனைய பல நகரங்களில் புர்கினிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விவகாரத்திலும் எதிரொலிக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.






