நடிகர் அருண் விஜய் நுங்கம்பாக்கம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருண்விஜய் தனது குடும்பத்துடன் காரில் திரும்பி வரும் வழியில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ் வாகனம் மீது மோதினார்.
இதில் அருண் விஜய்க்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் பொலிஸ் வாகனம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் பொலிசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் அவர் மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டதால் அவர்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிசார் அவரைக் கைது செய்தனர். பின்னர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.






