ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணைத்தளம் கடந்த வாரத்தில் இரண்டு முறை ஊடுருவல் நடத்தப்பட்டமைக்கு உள்ளுர் ஊடுருவலாளர்களே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் கடந்த வியாழக்கிழமையும், வெளிக்கிழமையும் அடுத்தடுத்து ஊடுருவல்களுக்கு உள்ளாகின.
முதலாவது ஊடுருவலின்போது ஸ்ரீலங்கா யூத் என்ற பெயரில் சில வாசகங்கள் அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கல்வி தொடர்பான கோரிக்கைககள் அதில் இடம்பெற்றிருந்தன.
இரண்டாவது ஊடுருவலின்போது பங்களாதேஷ் பிரஜை ஒருவரால் அது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
எனினும் அதுவும் உள்ளூர் ஊடுருவல் காரர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இணையத்தளம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.






