ஒலிம்­பிக்கில் ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட பிரெஞ்சு வீர, வீராங்­க­னை­க­ளுக்கு தடை!!

533

o1

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வின்­போது ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட கார­ணத்­துக்­காக பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவ­ருக்கு தற்­கா­லிக தடை விதித்துள்ளது.

டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்­க­னை­க­ளான கிறிஸ்­டினா மிலா­டே­னோவிக், கரோலின் கார்­சியா ஆகிய மூவரே தடைக்­குள்­ளா­ன­வர்­க­ளாவர்.  இந்த மூவ­ரி­னதும் நடத்தை சம்­மே­ள­னத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

‘ரியோ ஒலி­ம்பிக் விளை­யாட்டு விழா முடி­வ­டைந்த பின்னர் பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ள­னத்தின் குழு இந்த மூவர் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்­தது.

இவர்கள் சம்­மே­ள­னத்தின் விதி­களை மீறி­யுள்­ள­துடன் சம்­மே­ள­னத்தின் நற்­பெ­ய­ருக்கும் களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர்’ என அந்த அறிக்­கையில் குறி­பி­டப்­பட்­டுள்­ளது.

ரியோ ஒலிம்­பிக்கில் இரண்­டா­வது சுற்றில் இத்­தா­லியின் ஃபேபியோ ஃபொஞ்­ஞி­னி­யிடம் தோல்வி அடைந்த பாய்ரே, ஒலிம்பிக் வீரர்கள் கிரா­மத்­தி­லி­ருந்து நெடு நேரம் வெளியே இருந்­த­மைக்­காக உட­ன­டி­யாக நாட்­டிற்கு திருப்பி அனுப்­பப்­பட்­டி­ருந்தார். இதன் கார­ண­மா­கவே அவ­ரக்கு பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ளனம் தடை விதித்­துள்­ளது.

மில­டே­னோவிக், கார்­சியா ஆகிய இரு­வரும் தங்­க­ளது சீருடை தொடர்­பாக பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ள­னத்தை கடு­மை­யாக விமர்­சித்­த­மைக்­காக தடை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

செப்­டெம்பர் மாதம் 24 ஆம் திகதி எடுக்கப்படவுள்ள இறுதித் தீர்மானம்வரை இவர்கள் மூவரும் பிரான்ஸ் அணிக்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள் என பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

o2