மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய காலவகாசம்!!

496

MC

சட்டப்படியான ஆவணங்களற்ற மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு நான்கு மாத காலவகாசத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்படாததால் அரசுக்கு வருடாந்தம் பாரிய இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உரிய சட்டரீதியான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பரிசோதித்த பின் அவற்றுக்கான பதிவுகளை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.