வவுனியா நகரின் மத்தியிலிருக்கும் கால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவ்வீதியூடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா நகர் மத்தியிலிருக்கும் இக் கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்க வாய்ப்புக்கள் இருப்பதால் வவுனியா நகரசபையினர் இவ்விடயத்தில் கவனம் எடுத்து இக்கால்வாயினை சுத்தப்படுத்தித்தருமாறும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.











